Thursday, July 7, 2011

மக்கள்தொகைகணக்கெடுப்புநாள்

ஜூலை5-மக்கள்தொகைகணக்கெடுப்புநாள்.இதுமட்டும் சரியாகத்தான்   நடந்துக்கொண்டிருக்கிறது                                                                                          .                                                  மக்கள்தொகைகணக்கெடுப்பின்படி பார்த்தால்  இந்தியாவின்  மக்கள்தொகை121கோடிக்குமேல்.அதில் தமிழ்நாட்டின் மக்கட்தொகை  6கோடிக்குமேல்.இந்த ஆறு  கோடிக்குமேல்  உள்ளஜனத்தொகையில்    3கோடியே 14 லட்சம் பேர்  ஆண்கள்.  மூன்றுகோடியே  பத்துலட்சம்  பேர்தான்  பெண்கள்.இந்தநிலை1000 ஆண்களுக்கு 987பெண்கள்தான்   என்னும்  விகிதச்சாரத்தை தருகிறது.அதிலும்  7 வயதுக்குட்பட்ட   பெண்குழந்தைகள் எண்ணிக்கை    குறைவாக  உள்ளது. இதற்கு என்ன காரணம்?       பெண்  சிசுக்கொலை  என்பது பரவலாக  பேசப்பட்டும்   அதற்கான  விழிப்புணர்வு   அதிகரித்தும்  இருக்கும்  போதும்   அது  தடுக்கப்படவில்லை  என்றுதானே   தெரிகிறது!  மருத்துவமனைகளில்  இருக்கும் அறிவிப்புகள்   கருவில் இருக்கும்  சிசு ஆணா பெண்ணா    என்று தெரிவிப்பது   சட்டப்படி குற்றம்  என்று  சொல்கிறது.இருப்பினும்  ......??                                                                                                                   ஒரு  பிரபல   தொலைகாட்சி  நிகழ்ச்சி ஒன்றில்    பெண்களின் எண்ணிக்கை   குறைந்து வருவது    குறித்துபேசி  மீண்டும் மகாபாரத கதையில்  வருவதுபோல த்தான்  ஐந்து ஆண்களுக்கு ஒரு பெண்   என்று   நகைச்சுவையாக பேசினார்  ஒருவர் அதிலும்  அவர் ஒரு பேராசிரியர்.  இது  நகைச்சுவைக்கு  உரிய .விஷயமா?நீங்களே  யோசியுங்கள்.  மக்கட்தொகை கணக்கெடுப்பு நாள்   என்று   தெரிந்ததும்   இது பற்றி எழுத வேண்டும் என   தோன்றியது. எழுதிவிட்டேன்.பெண்ணாகிய எனக்கு இது ஒரு பெரிய    கடமை  என்று  நினைக்கிறென்.                                                                                                                    பின் குறிப்பு:    இது என் முதல்  பிரசவம்  ( முதல்  இடுகை)..   தவறு  இருப்பின்     மன்னிக்க!

2 comments:

  1. கேரளாவில் 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் தானாம். பிறப்பு விகிதம்.. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலம் டேஞ்சர் தான்

    ReplyDelete
  2. நன்றி சி.பி. செந்தில்.

    ReplyDelete